அலை ஓசை
"ஆர்பரிக்கும் கடல் அலைகளை பார்க்கும் போது
சிலருக்கு தோன்றும் அது மகிழ்ச்சியில் கரை வருகின்றது என்று
சுருண்டு ஒன்றோடு ஒன்று கரைக்கு வருகையில்
அவற்றில் ஒரு போராட்டம் நிகழும்
யார் கரையில் மண்ணோடு , மண்ணாக மக்கி
இறக்கபோகின்றோம் ...பயத்தோடு படபடப்பில்
சில அலை துளிகள் பாறைகளிலும் , சில மணலிலும் ,
நம் காலடியிலும் உயிர் துறக்க ..உறவுகளை இழந்த சோகமும்
உயிர் தப்பிய சந்தோஷத்தில் எழுப்பும் அலைகளின்
ஒலியே அலைஓசை! ,"
கவிதை
மதுரை என், நவ சதீஷ் குமார் .
1 comment:
super. Expecting more like this.
Post a Comment