Pages

Sunday, January 23, 2011

MG Ramachandran @ MGR

றைந்த முன்னாள் தமிழகத்தின் முதலமைச்சர் திரு. mgr அவர்களை பற்றி சில துளிகள் 
திரையுலகில் தடம் பதிக்க 11 ஆண்டுகள் கடுமையான போரட்டங்கள்ளுக்கு பிறகு இடம் பிடித்தவர் .
1917 ஆம் ஆண்டில் இலங்கையில் பிறந்தவர் mgr .நடிப்பு துறையில் சாதித்த பின்பு தான் திருமணம் என்று mgr கூறினாலும் தாயாரின் பிடிவாதத்தால் பாலக்காட்டை சேர்ந்த பாலாமணியை திருமணம் செய்து கொண்டார் . தீடிரென்று ஒரு நாள் மனைவி இறக்க 
துக்கம் தாளாமல் ஒரு துறவி போல வாழ்ந்தார் ,பிறகு தாயார் ஆறுதல் கூற சதானந்தவதி 
என்ற பெண்ணை மறு மணம் செய்தார் . முதல் கருவுற்ற சதானந்தவதிக்கு காச நோய் மறைந்தார் . பிறகு 20   ஆண்டு காலம் இல்லற துறவியாக இருந்தார் . 
பின்னணி பாடும் கால கட்டம் இல்லாத நிலையில் ,குரல் வளம் மிக்கவகர்கள் மட்டுமே 
கதாநாயகனாக நடிக்க முடியும் , அழகும் , திறமையும் உள்ள mgr  அவர்கள் இந்த கால கட்டத்தில் முன்னேற முடியவில்லை . 1946  -ல் பின்னணி சேர்க்கும் முறை சினிமா துறையில்  கண்டுபிடிக்கப்பட mgr  வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது . 
அடேய் ..அப்பா ... ஒரு மனிதனுக்குள்  இத்தனை சோதனைகளா?
இதையெல்லாம் தாண்டி இன் செய்த பேன்ட் , ஷர்ட் , தொப்பி , tie  அணிந்து மஞ்சுளா , 
லதா , பானுமதி , ஜெய லலிதா ...இத்தனை நடிகைகள்ளோடு ஆடி , பாடி நடித்து , நம்மை மகிழ்வித்தவர் mgr . தெரியாத அரசியலில் புகுந்து தமிழகத்தின் முதல்வர் ஆனவர் .
அவரின் நினைவு தினம் januvary 17 வருடம் , வருடம் நினைப்போம் அரசியல் சின்னமாக அல்ல ... துயரங்கள் சூழ்ந்த போதும் சாதிக்கும் மனிதராக நாம் நிலைக்க வேண்டும் 
என்பதன் அடையாளமாக !
-கட்டுரை 
என். நவ சதீஷ் குமார் 
மதுரை




www.navasathish.blogspot.com



Friday, January 21, 2011

go ahead without barrier -mind blowing article

 ஓடும் வரை ஓடலாம் --வாருங்கள் 
என். நவ சதீஷ் குமார்  
ப்போதும் கடும் போராட்டம் , உயர , உயர மனிதனுக்கு மட்டும் சவால்கள் , எதிரிகளை சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற பயம், பணம் சேர்க்க வேண்டும் அதனை உடன் சேர்க்கவேண்டும்ஓட , ஓட விரட்டும் மனம் ...வேண்டுதல்,ஜெபம் , பிரார்த்தனை இவைகள் எல்லாம் நமது சிந்தனைகளை சிறிது கட்டு படுத்த , ஆனால் இந்த காலத்தில் சுய நலம் மிக்கதாய் மாறி விட்ட தால், கிடா வெட்டி பொங்கல் வைத்து குடும்ப பிரச்சனை ,பண
 பிரச்சனை க்கு தீர்வு காணும் பாமரன் போல கம்ப்யூட்டர் படித்தவனும் மாறிவிட்டான்.


தீவிரவாதீகள் , கொலைகாரர்கள் , பெண் பித்தர்கள் , குடிகாரர்கள் இன்னும் சொல்ல கூசும் மனிதர்களை படைத்தது என்னை பொறுத்தவரை இறைவனின் புத்தி சாலி தனமே !
இறைவன்மேல் என்க்கு நம்பிக்கை இல்லை ஆனால் சிறு புழு முதல் புலி வரை சரியாக
ஜோடி சேர்க்க வைத்து  உணவு வகைகளை வகை படுத்தி அவைகளை உண்ண ஒரு டீமே
எங்கோ செயல் பட்டு கொண்டிருகின்றது அவர்கள் கண்ணில் இன்னும் படவில்லை..
ஆகவே நான் அவர்களை கடவுளாகவே பார்கின்றேன் .முதலில் நான் சொன்னேன்
இறைவன் , இழி பிறப்புகளை படித்ததில் கூட அவனின் புத்தி சாலி தனம் தான்.
உலகில் பெரும் பணக்காரர்கள் ,சாதனை மெடல் வாங்கியவர்கள் எல்லாம் மரணம் அடைந்தவுடன்  அவருக்கு வழங்கப்படும் பெயர் சவம்.
நமக்கு சிறு நீர் வருகின்றது அதை அடக்க முடிந்தால் எத்தனை துயரம் ?
அது போல தான் நமது உடல் உயிர் பிரிந்த பின் துன்பப்படுகின்றது ,,ஆகவே நான்
நினைக்கின்றேன் மரணம் கூட ஒரு வித கழிவு தான் என்று . அந்த கழிவு நம் உடலில் இருந்து அகற்றப்படும் போது நிச்சயம் ஆனந்தப்படும் ..இன்னும் யோசிக்கிறேன் ...அந்த மனித உடல் புதைக்கப்படும் போதோ , எரியூட்டப்படும் போதோ சுகம் , இன்னும் கூடும்!
அத்தனை புலன்களையும்  இன்பப்படுத்தும் மரணமே உன்னை வரவேற்கின்றேன் .
உயிர்ரற்ற உடலை கண்ணாடி ஐஸ் பெட்டியில் வைத்து உறவினர் வருகைக்காக காக்கும் போதும், போலீஸ் காரர்கள் விசாரணைக்காக பாதி அழுகிய நிலையில் நிலம் தோண்டும் போதும் உறக்கம் கலைப்பது போன்ற எரிச்சல் ..நான் தான் தேவை இல்லை ..என்னை ஏன் வாட்டி வதைகின்றீர்கள் ...கேட்க  உதடுகள் இல்லை...கேட்ப்பாரும் யாரும் இல்லை ..இது நான் செய்த பாவமா? ..ஒன்று மட்டும் தெரிகின்றது சுவடே இல்லாமல் அழியும் போது தான் உயிருக்கு விடுதலை , அப்பொழுது தான் ஆனந்த சுகம் கிடைக்கும் . 


போட்டிகள், பொறாமைகள் , இன்ப , துன்பங்கள் எல்லாம் நம்மை மேம்படுதுவையே   சிரமங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்றால் அனைத்தையும் சமாளிக்கும் பொறுமை வேண்டும் . "இல்லை " என்று எண்ணி ஏங்குவதை விட "ஏன் நம்மிடம் இல்லை " என்று எண்ணி அதனை "உண்டு" என்னும் செயலாக்கி காட்ட வேண்டும் ..பணம் இல்லை .. நீர் இல்லை ..என புலம்பாமல் அதனை உருவாக்க வேண்டும் .அதுவே நாம் இன்பமாக வாழ வழி வகுக்கும்.
சாக்கடையில் ஓடுவதும் நீர் தான் அது நாற்றம் எடுக்கின்றது .ஆற்றில் ஓடுவதும் நீர் தான்.. அதனை பருக முடிகின்றது .எனவே எது தங்கினாலும் அது நாற்றமே . அகவே வாழ்கையில் நாம் தேடுதலை நோக்கி ஒடிகொன்டே இருக்க வேண்டும் .
என்னிடம் ஒருவர் அரசு வேலையில் சேர்ந்ததை பெருமையாக எண்ணி கொண்டு என் மாத சம்பளம் இருபத்தைந்தது ஆயிரம் சம்பளம் , கிம்பளம் பாதி வேலை அதிகமும்  கிடையாது எல்லாம் என் எம் ஆர் பசங்க பார்த்துபாங்க உங்களுக்கு பிசினெஸ் நிரந்தரம் இல்லைல்ல சார் , மாசா...மாசம் இவ்வளவு வரன்னும் ...அவர் பேசுவதை மட்டம் தட்டுவதும , அகந்தையும் வெளிப்பட்டது , அவரை நான் ஒரு புண் முறுவலோடு பார்த்தேன் ..௦௦௦  திடீரெண்டு ஒரு நாள் அவரை ஒரு ஹோட்டலில் பார்த்தேன் ...
கையில் கோப்பை ...பீர் , வோட்கா , விஸ்கி , கலந்தடித்து புல் போதையில் இருந்தார் .
போதை இருந்தாலும் என்னை அடையாளம் கண்டு ஓடி வந்தார் ... சார் ... இந்த அரசாங்கமே மோசம் சார் ... மூணு வருஷம் அக்கடான்னு இருந்தேன் இப்ப ஆட்குறைப்பு , கட்டாயம் கம்ப்யூட்டர் பழகனும் , ஜூனியர் பசங்க ஐ .எ. எஸ் முடிச்சிட்டு ஆர்டர் போடுறானுங்க , சட்டம் பேசுறானுங்க ..டார்ச்சர் தாங்க முடியலே சார் .பேசாமே வீஆர்எஸ் வாங்கிட்டு உங்களை போல சுய தொழில் செய்ய போறேன் சார் .. என்றார் ..நான் சிரித்தேன் ..சார் உங்களுக்கு "ரிஸ்க் " எடுக்கும் மனோபாவம் இல்லை அது வராது ,
விடுமுறை வந்தால் வீட்டில் டிவி முன் அமர்ந்து பட்டி மன்றம் , மான் ஆட மயில் ஆட ,
நாயா? பேயா? , கதை அல்ல கன்றாவி , அப்புதாவை பழி வாங்கும் அதிசய ஆண்டி வைரஸ் ..உங்கள் மூன் டிவீயில் பார்க்க வேண்டும .. அதற்க்கு விளம்பரம் வாங்கி தரும் பணியில் இருப்பவன் கூட இதனை பார்க்க மாட்டான் , அவன் காசு பார்பான் ...ஆகவே நீங்கள் உங்கள் mind  செட் மாறாமல் எந்த முடிவும் எடுக்காதீர்கள் என்றேன்.
யோசித்தார் ..என்னை பொறமை பிடித்தவன் என்று எண்ணி இருப்பார் போலும் 
"இரண்டு நாளில் பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் " - ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு சென்றார் , "டே trading  , கம்மாடிட்டி trading  " பயிற்சி எடுத்தார் ..
ஆசை யாரை விட்டது ..தொடர்ந்த நஷ்ட்டம் . தேங்கிய வேலை தேகத்திருக்கு சுகம் கொடுக்கும் ஆனால் மனதிற்கு வளர்ச்சியை கொடுக்காது...விரைவில் தேக்கம் நம்மை முழ்கடித்து விடும் .
நீங்கள் பாருங்கள் .. தேங்கிய எண்ணங்கள் தொழில் அதிபர்களை உருவாக்குவதில்லை .
மேலாண்மையில்  தேங்கியவர் மேலாளர், கணக்கியலில் தேங்கியவர் கணக்காளர் , கம்ப்யூட்டர் இல் தேங்கியவர் ப்ரோக்ராமர் , அரசியலில் தேங்கியவர் தொண்டர் , கட்சியை புதுமைகளை புகுத்தி , எதிரிகளை ஓட விரட்ட சதா சிந்திக்கும் தேங்காத எண்ணங்களை கொண்டு கட்சியை வளர்பர்வர்கள் மட்டுமே முதல்வர்கள் !ஆகவே 
வாழ்கையில் முன்னேற என்றைக்கும் வேண்டாம் எதிலும் தேக்கம்.!
கட்டுரை 
-என் .நவ சதீஷ் குமார் .
16  ரயிலார் நகர் , மதுரை .
தமிழ் நாடு


 உங்களது ஊடகங்களில் இந்த கட்டுரையை இணைக்க , ஓளி , ஒலி செய்ய உங்களால்
இயன்ற தொகையை கீழ் கண்ட வங்கி கணக்கில் ஆன் லைன் மூலமாக செலுத்தல்லாம்


வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் கணக்கு எண்: 312  டைப்: sb ac        Branch  : koodal nagar 
மதுரை .


விளம்பரங்கள் வெளியிட கால் பக்கம் மாதம் 3000 /= inr மட்டுமே !
ஆபாச படங்கள் , அதுகுறித்த அறிவிப்புகள் வெளியிட அனுமதி இல்லை .
-நன்றி -
௦௦௦௦௦



படங்கள் : திரு : பொள்ளாச்சி மகாலிங்கம் மற்றும் முதல்வர் 
                    திரு; அணில் அம்பானி , முகேஷ் அம்பானி 
                     திரு : பில் கேட்ஸ் .
                     திரு : அத்வானி மற்றும் ஜெ.ஜெயலலிதா 


குறிப்பு : அரசியல் , விருப்பு வெறுப்புகள் இல்லாமல் படம் இணைக்க பட்டுள்ளது 




Thursday, January 20, 2011

navasathishstories: story 1 : computer manithargal

navasathishstories: story 1 : computer manithargal: " கம்ப்யூட்டர் ம..."

navasathishstories: go ahead without barrier -mind blowing article

navasathishstories: go ahead without barrier -mind blowing article: " ஓடும் வரை ஓடலாம் --வாருங்கள் என். நவ சதீஷ் குமார் எப்போதும் கடும் போராட்டம் , உயர , உயர மனிதனுக்கு மட்டும் சவால்கள் ..."

navasathishstories: go ahead without barrier -mind blowing article

navasathishstories: go ahead without barrier -mind blowing article: " ஓடும் வரை ஓடலாம் --வாருங்கள் என். நவ சதீஷ் குமார் எப்போதும் கடும் போராட்டம் , உயர , உயர மனிதனுக்கு மட்டும் சவால்கள் ..."

Tuesday, January 18, 2011

story 1 : computer manithargal

                         

கம்ப்யூட்டர்     மனிதர்கள்   
 சிறு கதை - என். நவ சதீஷ் குமார் 




ஸ்சில் கூட்டம்  அதிகம் , அதிகாலை எழுந்து பர பரபரப்பான சென்னை சாலைகளில் வரவேண்டும் , பெட்ரோல் விலை பயமுறுத்துவதால்
டூ வீலரில் பயணம்  செய்வது கையை கடிக்கும் ஆகவே சுமையை இருந்தாலும் இந்த பஸ் பயணம் சுகம் தான் . அரசு பணம் பெட்ரோல் பத்தி எல்லாம் கவலை படாது , எனவே கட்டணம் இந்த பட்ஜெட்டில்லும் ஏறாது மாறாக மின்சார கட்டணம் , காய்-கறி விலை எல்லாம் கூட்டி நமக்கு தெரியாமல் பர்ஸ் காலி என்பது
கண்டக்ட்டர் வரும் வரை நமக்கு உரைக்கவில்லை .அட ..சொகுசு பேருந்து 
ஜன்னல் சீட் கிடைத்து விட்டது
    
  ஜிலென்று காற்று வீசியது மனதில் ஏறியிருந்த புழுக்கம் மெல்ல அவிழ்ந்தது . ஆம் ..நான் அலுவலகத்தில் சீனியர் உதவியாளர் ..யார் தப்பு செய்தாலும் பொறுப்பை சுமக்கும் படு ஆபத்தான பதவி ..சம்பளம் ...சொற்பம் ..அரசு ஊழியர்களுக்கு சலுகை , பஞ்ச படி , போனஸ் எல்லாம் இருக்கின்றது, எங்களுக்கு எல்லாம்  கனவு மாயம் , அவர்கள் வெங்காயம் வாங்கி சாப்பிட்டால் நாம் குப்பைமேனி கீரையை சாப்பிட வேண்டும் , உடம்புக்கு நல்லது என்று ஆறுதல் படுத்தி புளித்த தயிர் சாதம் ...அதற்க்கு பெயர் லஞ்ச ..திறந்தால் குப் என்று ஒரு வாடை ரூம் முழுக்க இதுதான் 
எங்களை போன்ற தனியார் கம்பனி ஊழியர்களின் டிசென்ட் லஞ்சின் நிலை ! 


அதிகாரிகள் இப்போதெல்லாம் mba  படித்து விட்டு லேப்டாப் சகிதமாய் வருகின்றார்கள் 
1000௦௦௦-120௦ என்றால் உடனே எச்செல் சீட்டை திறந்து கணக்கு போட்டு பார்கின்றார்கள் நான் தரும் கால்குலேட்டர் கணக்கு தப்பாகுமாம்!  சாம் நவீன் ceo  
முன்பெல்லாம் ராஜரத்தினம் பிள்ளை , நடேசன் முதலியார் , வையாபுரி செட்டியார் 
 இப்படி தான் முதலாளிகள் பெயர் இருக்கும் காலம் கலி காலம் இளவட்டங்கள் பெயரிலும் மாற்றங்கள் ..


"சார்.. சார்" - கதவை பவ்யமாக திறக்க வேண்டும் ..முக்கால் வாசி மண்டை , அரை வாசி தொப்பை தெரிய "வரலாமா சார் " அடக்கமாய் கேட்க்க வேண்டும் "எஸ் கம் inn ". 
பதில்  சொல்லும் சாம் நவீன் . பைலை நீட்ட வேண்டும் ..நம் கண் முன்னே கம , கமக்கும்
சாக்லேட் காபி குடித்த படி " i  think you did   a
   பிக் மிஸ்டேக் " -எனக்கு ஈர குலை நடுங்கும் ...ஜாப் ல கவனம் இல்ல ...நல்லா பாருங்க இங்க தப்பு , அங்க தப்பு ..இங்கிலீஷ் சரியா தெரியல்ல ... ஒரு லெட்டர்ல இத்தனை தப்பு இருந்தா அர்த்தம் புரியுமா?.. ஆமா ..நாங்க படிகிறப்ப ஹிந்தி , இங்கிலீஷ் படிச்சா பெரிய பாவம் , தமிழ் வளர்ப்போம் , தாய் மொழி படிங்கன்னு சொன்னாங்க..தப்பு தான் ராசா ..இப்ப உங்க காலம் நல்ல வேலை அக்கௌன்ட் ல இருபதாயிரம் குறையுது ... ஆங்கிலம் கணக்கை காப்பாதிருச்சு!.
மிஸ்டர் ..இதுக்கும் கம்ப்யூட்டர் இருக்கு ...உங்க வேலைக்கு இது போதும் ..அலட்சியம் 
ஒரு இயந்திரத்தின் முன் ஏன் திறமை ஒப்பீடு ,நான் மனிதன் , சுகர் , பிரசர் , குழந்தை , குட்டி ,வெங்காயத்திற்கு பதில் வெள்ளை புடு   போடலமா ,முருங்கைக்காய் 10  ரூவா ..இட்லி பொடி கிடையாதுங்க ...மனைவியின் தினசரி பட்டி மன்றம் , எனது பட்ஜெட் தீர்ப்பு .. இன்வேர்ட்டர் இல்லாம வேக்காடா இருக்குங்க ...யோவ் நவீன் ...நீ ..உங்கப்பா சொத்துள்ள படிச்ச, வளர்ந்த ..நாங்க அடிமட்டம்பா ...நீ கம்ப்யூட்டர் ல அடிசால்லும் வாங்குவோம் ... அடி ஸ்கேல் ல அடிச்சாலும்  தாங்கனும் ..விதியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே ...பாட்டு கூட சோகம் தான் . 
ஒரு நாள் ஒரு யுகம் ...ஜவுளி கடை வேலை ..சின்ன முதலாளி , பெரியவர் கணக்கை முடித்து , கல்லா சாவி யை கொடுத்து விட்டு தாம்பரம் பஸ் நிலையம் நோக்கி நடந்தேன் .சென்னை சாலைகளில் பத்து மணி, இரவில் ட்ராபிக் இல்லை ... பஸ் வேகமாய் சென்று கொண்டிருந்தது .. சடன் பிரேக் , குலுங்கிய சீட்டில் , ஐயோ ..அம்மா ..பயணிகளின் அலறல் சத்தம் ...எதிரில் பார்க்க ... புத்தம் புதிய ஆடி கம்பனியின் கார் தலை குப்புற கிடந்தது . 108  ஆம்புலன்ஸ் வருவதற்குள் மிக சாதாரண மனிதர்கள் ஓடி வந்தார்கள் ..நானும் இறங்கினேன் .....அட ...என் ஈர குலையை காலையில் புடுங்க முயன்ற 
சாம் நவீன் ..எனது சின்ன முதலாளி ...நிறைய இரத்தம் வழிய சுய நினைவு இல்லை ..
அரக்க பறக்க பக்கத்தில் நின்ற ட்ராபிக் போலிஷிடம்  அனுமதி பெற்று கொண்டு 
அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து சென்றேன். 
    இரண்டு நாள் சென்று  இருக்கும் சின்ன முதலாளி அவசரமாக மருத்துவ மனைக்கு 
கூப்பிடுவதாக செல் வந்தது . மருத்துவ மனையின் வசதி படைத்த அறை, துன்பங்கள் இருந்தாலும், பணக்காரர்களுக்கு அதிலும் சுகம் ..ஏக்கம் என்னுள் ..
"வாங்க ... வேலு சார் ....உங்களுக்கு ரொம்ப நன்றி சார் ... எனக்கு கொஞ்சம் காலில் அடி, முகத்தில் கீறல் , ஹார்ட் தப்பிதிருச்சு ... மூளைக்கு இரத்தம் கொஞ்சம் ஸ்டாப் ஆயிருந்தா கோமா தான் ... ஆல் கிரடிட் உங்களுக்கு தான் சார் ... மனிதன் உணர்ச்சி வசப்படும் போது கண்ணீர் வருகின்றது , கடவுள் நம்பிக்கை வருகின்றது , தான் என்ற அகம்பாவம் உடைந்து போய்விடுகின்றது . சல்யூட் அடிக்க "'ம்ம்ம்" என்று தலை தூக்காமல் நடக்கும் சாம் நவீன் இப்போது கை குப்பி வணக்கம் வைக்கின்றான் .
".சார் ..மெல்ல ஆரம்பித்தேன் ...சொல்லுங்க வேலு  ... டென் தவுசண்ட் ருபீஸ் செக்போட சொல்லியிருக்கேன் ..ப்ளீஸ் ..அக்சப்ட் பண்ணிக்கங்க .." மனிதாபிமானம் பணத்தால் விலை நிர்ணயம் செய்தது . சார் ..எனக்கு பணம் அவசியம் தான் இல்லைன்னு சொல்லலே ..இப்ப நான் செய்தது ஆபீஸ் வேலை இல்ல ...சன்மானம் தேவை இல்லை .. சார் ..கம்ப்யுட்டர் படு வேகமா வேலை செய்யும் , உங்க ப்ரோக்ராம்மே அது சரியா செய்யும் ... ஆனா மத்தவங்கள மதிச்சா தான் நிர்வாகமே நல்லா நடக்கும் .
லேப்டாப் மடில இருக்கும் மார்புக்கு பிரச்சனை வந்தா நெஞ்சை தடவாது .
கம்ப்புட்டர் கட் பண்ணும் , பேஸ்ட் பண்ணும் , உறவுகளை ஓட்ட நெட்வொர்க் போடாது .
உங்க அப்பா காலத்துல நாங்க மனுசனா மதிகப்பட்டோம் , பணத்தை விட அவங்களுக்கு தொழிலாளி மேல விசுவாசம் அதிகம் , நீங்க ஒரு மெசினை வச்சிகிட்டு தினமும் மிரட்டிட்டு இருக்கீங்க... வேலைக்கு உத்திரவாதம் இல்லைன்னு நீங்க சொல்ல , சொல்ல பயத்துல குனி , குறுகி உங்க முன்னாடி அடிமையாய் நிற்கிறோம் , சார் , கம்ப்யூட்டர் 
வியாபாரத்தை வளர்க்கும் , அனால் உங்க மனசு மட்டும் தான் எங்களை தக்க வைக்கும் ,
வளர்ந்த வியாபாரம் தலைகனும்னா எங்க மனசை பாருங்க ..ப்ளீஸ் சார் " - என்று 
சொல்லிவிட்டு விடை பெற, மெல்ல ஒரு எலெக்ட்ரானிக் மனசு மனித அவயங்களோடு 
உருமாறி கொண்டிருக்கும் அழகை கண்கள் காட்ட பாரம் இறக்கிய நிம்மதியில் அலுவலகம் நோக்கி நடக்க துவங்கினேன் .
                                     -------முற்றும் -------


மதுரை . -என். நவசதிஷ்குமார்
16 ரயிள்ளார் நகர் முதல் தெரு
மதுரை -18 

பிற்குறிப்பு :-
அன்புள்ள வாசக பெருமக்களே ..உங்களுக்கு எனது ப்ளாக் பிடித்திருந்தால் உங்களது ஊடகங்களில் பயன் படுத்தி கொள்ளுங்கள். ஒலி, ஓளி காட்சிகள் ஆகவும் பதிவு செய்யல்லாம் . அதற்க்கான கட்டணம் உங்கள் விருப்பம் அதனை  
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 
கூடல் நகர் கிளை 
sb     அக்கௌன்ட் நம்பர் : 312      மூலம் ஆண் லைனில் செலுத்தலாம் .

  

  For advertisers can post ads 
11.5 * 16 cms for 3 months 3000 rupees only


send your design thru navasathish@gmail.com
for posting your ads