Pages

Friday, January 21, 2011

go ahead without barrier -mind blowing article

 ஓடும் வரை ஓடலாம் --வாருங்கள் 
என். நவ சதீஷ் குமார்  
ப்போதும் கடும் போராட்டம் , உயர , உயர மனிதனுக்கு மட்டும் சவால்கள் , எதிரிகளை சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற பயம், பணம் சேர்க்க வேண்டும் அதனை உடன் சேர்க்கவேண்டும்ஓட , ஓட விரட்டும் மனம் ...வேண்டுதல்,ஜெபம் , பிரார்த்தனை இவைகள் எல்லாம் நமது சிந்தனைகளை சிறிது கட்டு படுத்த , ஆனால் இந்த காலத்தில் சுய நலம் மிக்கதாய் மாறி விட்ட தால், கிடா வெட்டி பொங்கல் வைத்து குடும்ப பிரச்சனை ,பண
 பிரச்சனை க்கு தீர்வு காணும் பாமரன் போல கம்ப்யூட்டர் படித்தவனும் மாறிவிட்டான்.


தீவிரவாதீகள் , கொலைகாரர்கள் , பெண் பித்தர்கள் , குடிகாரர்கள் இன்னும் சொல்ல கூசும் மனிதர்களை படைத்தது என்னை பொறுத்தவரை இறைவனின் புத்தி சாலி தனமே !
இறைவன்மேல் என்க்கு நம்பிக்கை இல்லை ஆனால் சிறு புழு முதல் புலி வரை சரியாக
ஜோடி சேர்க்க வைத்து  உணவு வகைகளை வகை படுத்தி அவைகளை உண்ண ஒரு டீமே
எங்கோ செயல் பட்டு கொண்டிருகின்றது அவர்கள் கண்ணில் இன்னும் படவில்லை..
ஆகவே நான் அவர்களை கடவுளாகவே பார்கின்றேன் .முதலில் நான் சொன்னேன்
இறைவன் , இழி பிறப்புகளை படித்ததில் கூட அவனின் புத்தி சாலி தனம் தான்.
உலகில் பெரும் பணக்காரர்கள் ,சாதனை மெடல் வாங்கியவர்கள் எல்லாம் மரணம் அடைந்தவுடன்  அவருக்கு வழங்கப்படும் பெயர் சவம்.
நமக்கு சிறு நீர் வருகின்றது அதை அடக்க முடிந்தால் எத்தனை துயரம் ?
அது போல தான் நமது உடல் உயிர் பிரிந்த பின் துன்பப்படுகின்றது ,,ஆகவே நான்
நினைக்கின்றேன் மரணம் கூட ஒரு வித கழிவு தான் என்று . அந்த கழிவு நம் உடலில் இருந்து அகற்றப்படும் போது நிச்சயம் ஆனந்தப்படும் ..இன்னும் யோசிக்கிறேன் ...அந்த மனித உடல் புதைக்கப்படும் போதோ , எரியூட்டப்படும் போதோ சுகம் , இன்னும் கூடும்!
அத்தனை புலன்களையும்  இன்பப்படுத்தும் மரணமே உன்னை வரவேற்கின்றேன் .
உயிர்ரற்ற உடலை கண்ணாடி ஐஸ் பெட்டியில் வைத்து உறவினர் வருகைக்காக காக்கும் போதும், போலீஸ் காரர்கள் விசாரணைக்காக பாதி அழுகிய நிலையில் நிலம் தோண்டும் போதும் உறக்கம் கலைப்பது போன்ற எரிச்சல் ..நான் தான் தேவை இல்லை ..என்னை ஏன் வாட்டி வதைகின்றீர்கள் ...கேட்க  உதடுகள் இல்லை...கேட்ப்பாரும் யாரும் இல்லை ..இது நான் செய்த பாவமா? ..ஒன்று மட்டும் தெரிகின்றது சுவடே இல்லாமல் அழியும் போது தான் உயிருக்கு விடுதலை , அப்பொழுது தான் ஆனந்த சுகம் கிடைக்கும் . 


போட்டிகள், பொறாமைகள் , இன்ப , துன்பங்கள் எல்லாம் நம்மை மேம்படுதுவையே   சிரமங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்றால் அனைத்தையும் சமாளிக்கும் பொறுமை வேண்டும் . "இல்லை " என்று எண்ணி ஏங்குவதை விட "ஏன் நம்மிடம் இல்லை " என்று எண்ணி அதனை "உண்டு" என்னும் செயலாக்கி காட்ட வேண்டும் ..பணம் இல்லை .. நீர் இல்லை ..என புலம்பாமல் அதனை உருவாக்க வேண்டும் .அதுவே நாம் இன்பமாக வாழ வழி வகுக்கும்.
சாக்கடையில் ஓடுவதும் நீர் தான் அது நாற்றம் எடுக்கின்றது .ஆற்றில் ஓடுவதும் நீர் தான்.. அதனை பருக முடிகின்றது .எனவே எது தங்கினாலும் அது நாற்றமே . அகவே வாழ்கையில் நாம் தேடுதலை நோக்கி ஒடிகொன்டே இருக்க வேண்டும் .
என்னிடம் ஒருவர் அரசு வேலையில் சேர்ந்ததை பெருமையாக எண்ணி கொண்டு என் மாத சம்பளம் இருபத்தைந்தது ஆயிரம் சம்பளம் , கிம்பளம் பாதி வேலை அதிகமும்  கிடையாது எல்லாம் என் எம் ஆர் பசங்க பார்த்துபாங்க உங்களுக்கு பிசினெஸ் நிரந்தரம் இல்லைல்ல சார் , மாசா...மாசம் இவ்வளவு வரன்னும் ...அவர் பேசுவதை மட்டம் தட்டுவதும , அகந்தையும் வெளிப்பட்டது , அவரை நான் ஒரு புண் முறுவலோடு பார்த்தேன் ..௦௦௦  திடீரெண்டு ஒரு நாள் அவரை ஒரு ஹோட்டலில் பார்த்தேன் ...
கையில் கோப்பை ...பீர் , வோட்கா , விஸ்கி , கலந்தடித்து புல் போதையில் இருந்தார் .
போதை இருந்தாலும் என்னை அடையாளம் கண்டு ஓடி வந்தார் ... சார் ... இந்த அரசாங்கமே மோசம் சார் ... மூணு வருஷம் அக்கடான்னு இருந்தேன் இப்ப ஆட்குறைப்பு , கட்டாயம் கம்ப்யூட்டர் பழகனும் , ஜூனியர் பசங்க ஐ .எ. எஸ் முடிச்சிட்டு ஆர்டர் போடுறானுங்க , சட்டம் பேசுறானுங்க ..டார்ச்சர் தாங்க முடியலே சார் .பேசாமே வீஆர்எஸ் வாங்கிட்டு உங்களை போல சுய தொழில் செய்ய போறேன் சார் .. என்றார் ..நான் சிரித்தேன் ..சார் உங்களுக்கு "ரிஸ்க் " எடுக்கும் மனோபாவம் இல்லை அது வராது ,
விடுமுறை வந்தால் வீட்டில் டிவி முன் அமர்ந்து பட்டி மன்றம் , மான் ஆட மயில் ஆட ,
நாயா? பேயா? , கதை அல்ல கன்றாவி , அப்புதாவை பழி வாங்கும் அதிசய ஆண்டி வைரஸ் ..உங்கள் மூன் டிவீயில் பார்க்க வேண்டும .. அதற்க்கு விளம்பரம் வாங்கி தரும் பணியில் இருப்பவன் கூட இதனை பார்க்க மாட்டான் , அவன் காசு பார்பான் ...ஆகவே நீங்கள் உங்கள் mind  செட் மாறாமல் எந்த முடிவும் எடுக்காதீர்கள் என்றேன்.
யோசித்தார் ..என்னை பொறமை பிடித்தவன் என்று எண்ணி இருப்பார் போலும் 
"இரண்டு நாளில் பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் " - ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு சென்றார் , "டே trading  , கம்மாடிட்டி trading  " பயிற்சி எடுத்தார் ..
ஆசை யாரை விட்டது ..தொடர்ந்த நஷ்ட்டம் . தேங்கிய வேலை தேகத்திருக்கு சுகம் கொடுக்கும் ஆனால் மனதிற்கு வளர்ச்சியை கொடுக்காது...விரைவில் தேக்கம் நம்மை முழ்கடித்து விடும் .
நீங்கள் பாருங்கள் .. தேங்கிய எண்ணங்கள் தொழில் அதிபர்களை உருவாக்குவதில்லை .
மேலாண்மையில்  தேங்கியவர் மேலாளர், கணக்கியலில் தேங்கியவர் கணக்காளர் , கம்ப்யூட்டர் இல் தேங்கியவர் ப்ரோக்ராமர் , அரசியலில் தேங்கியவர் தொண்டர் , கட்சியை புதுமைகளை புகுத்தி , எதிரிகளை ஓட விரட்ட சதா சிந்திக்கும் தேங்காத எண்ணங்களை கொண்டு கட்சியை வளர்பர்வர்கள் மட்டுமே முதல்வர்கள் !ஆகவே 
வாழ்கையில் முன்னேற என்றைக்கும் வேண்டாம் எதிலும் தேக்கம்.!
கட்டுரை 
-என் .நவ சதீஷ் குமார் .
16  ரயிலார் நகர் , மதுரை .
தமிழ் நாடு


 உங்களது ஊடகங்களில் இந்த கட்டுரையை இணைக்க , ஓளி , ஒலி செய்ய உங்களால்
இயன்ற தொகையை கீழ் கண்ட வங்கி கணக்கில் ஆன் லைன் மூலமாக செலுத்தல்லாம்


வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் கணக்கு எண்: 312  டைப்: sb ac        Branch  : koodal nagar 
மதுரை .


விளம்பரங்கள் வெளியிட கால் பக்கம் மாதம் 3000 /= inr மட்டுமே !
ஆபாச படங்கள் , அதுகுறித்த அறிவிப்புகள் வெளியிட அனுமதி இல்லை .
-நன்றி -
௦௦௦௦௦



படங்கள் : திரு : பொள்ளாச்சி மகாலிங்கம் மற்றும் முதல்வர் 
                    திரு; அணில் அம்பானி , முகேஷ் அம்பானி 
                     திரு : பில் கேட்ஸ் .
                     திரு : அத்வானி மற்றும் ஜெ.ஜெயலலிதா 


குறிப்பு : அரசியல் , விருப்பு வெறுப்புகள் இல்லாமல் படம் இணைக்க பட்டுள்ளது 




No comments: